புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு

Updated On :8 ஏப்ரல் 2021, 10:12 am

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், 

மாநிலத்தில் கரோனா வைரஸ் நிலைமையை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும், அனைத்து நகர்ப்புறங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இரண்டு நாள்களுக்கு முழுமையான ஊரடங்கு விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஏற்கெனவே மாநிலத்தின் 13 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர ஊரடங்கு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னதாக, ம.பி.யின் அனைத்து நகரங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்தது. புதன்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் 4,043 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களும் பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளைக் கழுவுதல் போன்றவை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.