2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கோவாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை: முதல்வர்

கோவாவில் கரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் திங்களன்று தெரிவித்தார். 

News image
கோவாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை: முதல்வர்
Updated On :27 ஜனவரி 2024, 7:56 pm

IANS

கோவாவில் கரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் திங்களன்று தெரிவித்தார். 

பனாஜியில் அரசு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பேசியதாவது, 

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், ஒவ்வொருவரும் தங்களைச் சோதனை செய்துகொள்ள வேண்டும். 

மேலும், கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

கோவாவில் நாளொன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட கரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. எனவே, அதைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

கடந்த 24 மணிநேரத்தில் 265 தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,077 ஆக உயர்ந்துள்ளது. 835 வைரஸ் தொற்றுக்கு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.