டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா 

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் தலைவரும், எரிசக்தி அமைச்சருமான நிதின் ராவுத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image

Another Maharashtra Minister infected by Covid

Updated On :18 செப்டம்பர் 2020, 9:41 am

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் தலைவரும், எரிசக்தி அமைச்சருமான நிதின் ராவுத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ் கூட்டணி அரசில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 8-ஆவது அமைச்சா் இவராவார். தற்போதைய நிலையில், ஜிதேந்திர அவாத், அசோக் சவான் உள்பட மற்ற அமைச்சா்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 

மேலும், சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தங்களுடன் இருந்த உதவியாளர்களுக்குத் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக சுய தனிமைப்படுத்துதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.