பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வீடு வீடாக வந்து குப்பை சேகரிக்க ரூ.200 கட்டணம்

பெங்களூரு மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கவும், எங்குமே குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதற்கும், பொதுமக்களிடம் இருந்து வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image

வீடு வீடாக வந்து குப்பை சேகரிக்க ரூ.200 கட்டணம்: எங்கு தெரியுமா?

Updated On :19 நவம்பர் 2020, 6:00 am


பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கவும், எங்குமே குப்பை இல்லாத நகரமாக மாற்றுவதற்கும், பொதுமக்களிடம் இருந்து வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்க பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், சேவைக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது, வீடு வீடாக வந்து பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், குப்பைகளை சேகரித்துச் செல்ல சேவைக் கட்டணமாக, குடியிருப்புவாசிகள் மாதந்தோறும் ரூ.200-ஐ செலுத்த வேண்டும். இந்த சேவைக் கட்டணம் வரும் ஜனவரி மாதம் முதல் வசூலிக்கப்பட உள்ளது. இதை, பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்தும் போது சேர்த்துக் கட்ட வேண்டும்.

இந்த சேவைக் கட்டண வசூலிப்புக்கு கடந்த ஜூன் மாதமே பெங்களூரு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கி, அதற்கு அரசும் அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், அப்போது அதை அமல்படுத்தவில்லை. இது அபராதக் கட்டணம் போல அல்ல. சேவைக் கட்டணமாகவே வசூலிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்தாலும், இதனை குடியிருப்புவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சியில் சுமார் 1 கோடி பேர் வசிக்கிறார்கள். அந்த வகையில் 32 லட்சம் குடியிருப்பவாசிகளிடமிருந்து இந்த கட்டணம் வசூலிக்கப்படும். அரசின் மற்றத் துறைகள் வசூலிப்பதைப் போலவே இது வெறும் சேவைக் கட்டணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தூய்மைப் பணிகளை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல், நிர்வாகப் பணிகளை மாநகராட்சி சரியாக கைகொள்ளாமல், அதற்கு சேவைக் கட்டணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.