பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

திருமணத்துக்கு முந்தைய புகைப்படமெடுக்கும் நிகழ்ச்சியில் நேரிட்ட விபத்தில் சிக்கி மணமக்கள் இருவருமே பலியான சோகம் இருவீட்டாரையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

News image

திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

Updated On :10 நவம்பர் 2020, 4:52 am

மைசூரு: திருமணத்துக்கு முந்தைய புகைப்படமெடுக்கும் நிகழ்ச்சியில் நேரிட்ட விபத்தில் சிக்கி மணமக்கள் இருவருமே பலியான சோகம் இருவீட்டாரையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

மைசூரு நகரைச் சேர்ந்தவர்கள் சந்துரு - சசிகலா. இவர்களுக்கு வரும் நவம்பர் 22-ம் தேதி திருமணம் நடைபெற இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணத்துக்கு முன்பு, இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி, மைசூரு அரண்மனை, காவிரி நதி, மற்றும் சில இடங்களில் புகைப்படக் கலைஞர்களை வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள மணமக்கள் விரும்பினர்.

அதன்படி, மைசூரு அரண்மனையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, தாலக்காடு பகுதியில் காவிரி நதியில் புகைப்படங்களை எடுக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்கு படகு கிடைக்காததால், ஒரு பவளப்பாறை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டனர். சந்துரு பாறை மீது ஏறி நின்று கொள்ள, அப்போது சசிகலாவும் அந்த பாறையில் ஏற முயன்றார். ஆனால், அவர் மிக உயரமான குதிகால் கொண்ட காலணியை அணிந்திருந்ததால், பாறையில் கால் வழுக்கி, ஆற்றில் விழுந்தார். அவரைப் பிடிக்க முயன்ற சந்துருவும் ஆற்றுக்குள் விழுந்தார். இருவரும் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்த பொதுமக்களும், நீச்சல் தெரிந்தவர்களும் ஆற்றுக்குள் தேடிப் பார்த்தனர். விரைந்து வந்து காவல்துறையினர் மேற்கொண்ட மீட்புப் பணியில் 3 - 4 மணி நேரத்துக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்கள், புகைப்படம் எடுக்க விரும்பி, இப்படி உயிரை இழந்த சம்பவம் இருவீட்டாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.