பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மகாராஷ்டிர ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி, 6 பேர் காயம்

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

Two killed, six injured in explosion at chemical factory in Maharashtra's Raigad district

Updated On :5 நவம்பர் 2020, 7:07 am

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மும்பையிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோபோலி நகரத்தின் சஜ்கான் தொழிற்சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து வளாகத்தில் தீ பரவியதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கோபோலி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், 

இந்த வெடிவிபத்தில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் கோபோலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அதிகாலை வரை தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.