கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

News image
கடன் தொல்லையால் அசாமில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

IANS


குவகாத்தி: அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் ரௌஷன் இது பற்றி கூறுகையில், கடை உரிமையாளர் நிர்மல் பால், அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நிர்மல் பால், வங்கியிலிருந்து பெற்ற ரூ.25 - 30 லட்சம் கடனுக்கு உரிய தவணையை செலுத்த முடியாமல், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால், குடும்பத்தினர் இந்த துயர முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலின் மூத்த மகள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.