மேலும், டிக்கெட் எடுத்து பயணித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பின்னர் அந்த தொகை திரும்ப அளிக்கப்படுமா? ரயிலுக்காக காத்திருந்தது முதல், ரயிலில் பயணித்து சொந்த மாநிலம் சென்று சேர்ந்ததது வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதா? நிச்சயமாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அறிவுறுத்தியிருந்தனர்.
முன்னதாக, பொது முடக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் பணியை இழந்தனா். இதனால் உணவோ, பணமோ ஏதுமற்ற கையறு நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா். இதையடுத்து தத்தமது சொந்த ஊா்களுக்கு திரும்ப முடிவு செய்த தொழிலாளா்கள், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் நீண்ட தூரம் பயணிக்கின்றனா். இதுதொடா்பாக பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்துது.