தில்லியின் கேசவ்புரம் பகுதியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடமேற்கு தில்லியில் உள்ள கேசவ்புரத்தில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ஷூ உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து காலை 8.34 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வந்ததாகத் தீயணைப்பு அதிகாரி அனுஜ் கார்க் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 23 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடத்தில் சிக்கியவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 12 மணி நேரத்திற்குள் தில்லியில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து இதுவாகும். மே 25-ம் தேதி இரவு துலகாபாத் சேரிப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 250 குடிசைகள் எரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


