ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வயல்களுக்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: விரட்ட ம.பி விவசாயிகளின் புது ‘டெக்னிக்’

தங்களது வயல்களில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்தியப் பிரதேச விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

News image

வெட்டுக்கிளிகளின் தாக்குதல்

Updated On :26 மே 2020, 10:55 am

செஹோர்: தங்களது வயல்களில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்தியப் பிரதேச விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னால் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. அத்துடன் விளைச்சலுக்கும் அவை கடுமையான் சேதத்தை உண்டாக்கின. தற்போது பாகிஸ்தானுடன் எல்லைப்பகுதியில் இருக்கும் வடமாநிலங்களில் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்கமானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் குறிப்பாக செஹோர் மாவட்டத்தில் புத்னி மற்றும் நஸ்ருலாகஞ்ச் ஆகிய பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.   

இந்நிலையில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, செஹோர் மாவட்ட விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

அதன்படி அவர்கள் கூட்டமாகக் கூடி பாத்திரங்களைத் தட்டி ஓசை  எழுப்புவதால் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை தடுக்கிறார்கள். அத்துடன் பயிர்கள் மற்றும் மரங்களில் கிருமிநாசினிக் கரைசல்களைத் தெளிப்பது உள்ளிட்ட வழக்கமான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.                  

அவர்களது இந்த செயல்பாடுகளை மாநில வேளாண் விஞ்ஞானிகள் வெகுவாகப் பாராட்டுவதோடு தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.