புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மஞ்சளுக்கு பதில் பச்சைக் கருவுடன் கோழி முட்டை: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

மலப்புரத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரது கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் ஆறு கோழிகள் மஞ்சளுக்கு பதில் பச்சைக் கருவுடன் முட்டைப் போடுவதுதான் தற்போது அந்தப் பகுதி மக்களின் பேச்சாக உள்ளது.

News image
Updated On :23 மே 2020, 7:32 am


மலப்புரம்: மலப்புரத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரது கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் ஆறு கோழிகள் மஞ்சளுக்கு பதில் பச்சைக் கருவுடன் முட்டைப் போடுவதுதான் தற்போது அந்தப் பகுதி மக்களின் பேச்சாக உள்ளது.

மஞ்சளுக்கு பதிலாக பச்சை நிறக் கருவுடன் முட்டையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஷிஹாபுதீனை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டு வருகிறார்களாம்.

கோழி முட்டையின் நிறம் மாறியிருப்பது குறித்து கேரள மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 9 மாதங்களுக்கு முன்பு தங்களது கோழிப் பண்ணையில் ஒரு கோழிப் போட்ட முட்டை பச்சை நிறத்தில் இருந்ததை கண்டறிந்தனர். அதை தங்கள் குடும்பத்தார் சாப்பிட்டு வருவதாகவும், ஆனால் அது உடல் நலனுக்கு நல்லதா என்ற கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருப்பதாகவும் ஷிஹாபுதீன் கூறினார்.

சுவையில், சாதாரண கோழி முட்டையைப் போன்றே இந்த பச்சை நிற முட்டையும் இருக்கிறது. ஆனால் நிறம் தான் வேறுபடுகிறது. விரைவில் இந்த முட்டை மற்றும் இதுபோன்று முட்டையிடும் கோழிகளையும் விற்பனை செய்ய ஹிஷாபுதீன் திட்டமிட்டுள்ளாராம்.

வேறு ஏதேனும் சிறப்பு உணவு மூலமாக இதுபோன்று கரு முட்டையின் நிறம் மாற வாய்ப்பிருப்பதாகவும், இது பற்றிய உண்மை நிலையைக் கண்டுபிடிக்க சில வாரங்கள் ஆகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.