கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று காலை முதலே கன மழை பெய்து வந்தது. மேலும் கடும் புயல் காற்றால், விமான நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டட அமைப்புகள் இடிந்துவிழுந்து சேதமடைந்தன. விமானங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.
வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் திகா பகுதி, வங்கதேசத்தின் ஹாதியா தீவுகள் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வரை வீசத் தொடங்கிய புயல் காற்று அதிகபட்சமாக, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை வீசியது. புயலின் மையப் பகுதியானது 30 கி.மீ. விட்டத்தைக் கொண்டிருந்தது.