இந்நிலையில், இன்று காலை குழந்தையை குளிக்க வைக்கும்போது, தொடைப்பகுதி தென்பட்ட ஊசியின் பாதி பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்துள்ளார், குழந்தையின் பாட்டி அமிர்தவள்ளி. இதைக்கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற பிச்சாண்டவர் – தாமரைச்செல்வி இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்த மருத்துவர் வில்லியம் ஆண்ட்ரூஸிடம் தடுப்பு ஊசி உடைந்து குழந்தையில் தொடையில் இருந்தது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்திடவும், குழந்தையின் உடல் நிலை குறித்து முழு பரிசோதனை நடத்திடவும் புகார் அளித்துள்ளனர்.