சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1,400ஐ எட்டியது

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1,400ஐ எட்டியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:40 pm

ANI

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1,400ஐ எட்டியுள்ளது.

இது குறித்து மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்திருப்பதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 1388ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 428 பேர் குணமடைந்துவிட்டனர். 12 பேர் மரணம் அடைந்தனர். 948 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது.  இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.