புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

குவைத்தில் இருந்து போபால் திரும்பிய 19 பேருக்கு கரோனா

குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மே 2020, 6:37 am

போபால்: குவைத்தில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 130 பயணிகளில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தியா வந்து சேர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் விமானத்தில் வந்தவர்களும், விமான நிலைய ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அவர்கள் ராணுவ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 19 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றவர்கள் ராணுவ மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இவர்களில் 70 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் கரோனா சோதனை செய்யப்பட உள்ளது. 

மேலும், அவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.