பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தற்சார்பு இந்தியா: தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்களுக்கான திட்டங்கள் அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று நாட்டில் உள்ள தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

News image
Updated On :14 மே 2020, 10:43 am


புது தில்லி: பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று நாட்டில் உள்ள தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பி.எஃப். சந்தா உள்ளிட்ட முதல் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று வெளிமாநில தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 9 அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மூன்று அறிவிப்புகள்.
முத்ரா வங்கிக் கடன் தொடர்பான ஒரு அறிவிப்பு.
விவசாயிகளுக்கான இரண்டு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்றும் பிற அறிவிப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தெருவோர வியாபாகளுக்கு  1 அறிவிப்பும், சிறு வியாபாரிகளுக்கு இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.