புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

எர்ணாகுளம்: புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணமாக ரூ.32 லட்சம் வசூல்

மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரூ.32 லட்சம் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மே 2020, 10:16 am


கொச்சி: மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரூ.32 லட்சம் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மே 1 முதல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 5500 புலம்பெயர் தொழிலாளர்கள் பிகார் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சென்றுள்ளனர்.

ஒரு டிக்கெட் ரூ.530 என்ற அளவில் ஒவ்வொரு தொழிலாளர்களிடம் இருந்தும் ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எர்ணாகுளம் மாவட்ட நிர்வாக அதிகாரி கூறுகையில், இந்த தொகை முன்பதிவு செய்யாத டிக்கெட் கட்டணத்துக்குதான் ஈடாகும். சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை இந்திய ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மாநில அரசு தரப்பில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர் அனைத்தையும் மாநில அரசு வழங்குகிறது என்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துப் பணிகளை கண்காணிக்கும் கொச்சி துறைமுக துணை ஆட்சியர் ஸ்னேஹில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கடந்த சில மாதங்களாக பணிக்குச் செல்லவில்லை. ஆனால், இதைவிட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. சாதாரணமாக அலுவா - புவனேஸ்வர் இடையே செல்ல ரூ.445 தான் கட்டணம். தற்போது ரூ.530 வசூலிக்கப்படுகிறது. கஷ்டப்பட்டு இந்த கட்டணத்தை கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.