குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 45 வயது கேபிள் ஆபரேட்டர் கரோனா பாதித்து மரணம் அடைந்தார். அவருக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பதை காவல்துறை கடும் முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்று குண்டூர் திரும்பிய 54 வயது நபர் மூலமாக கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா பாதித்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கேபிள் ஆபரேட்டருக்கு ஏற்கனவே காசநோய் இருந்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி அவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஏப்ரல் 10ம் தேதி அவர் மரணம் அடைந்தார். அவர் மூலமாக நரசரோபேட் பகுதியில் நிறைய பேருக்கு கரோனா தொற்று பாதித்தது.
இந்த கேபிள் டிவி ஆபரேட்டருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் சென்றுள்ளார். வழியில், பேருந்து நிலையத்தில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். அதே சமயம், கேபிள் ஆபரேட்டரும் அதே தேநீர் கடைக்கு வந்து தேநீர் குடித்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் அந்த கடையில் நின்று தேநீர் குடித்துள்ளனர். அப்போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களின் செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் எந்த பகுதிகளுக்கு எல்லாம் சென்றுள்ளனர் என்று கண்டுபிடித்து, அந்த சமயத்தில் வேறு கரோனா நோயாளிகள் யார் யார் இருந்துள்ளனர் என்பதை கண்டறியும் போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கரோனா தொற்றியது பற்றி காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.
பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 7வது நபரிடம் விசாரித்ததில், அவர் பேருந்து நிலையத்தில் தேநீர் அருந்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த கேபிள் ஆபரேட்டர் மூலமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கும், நண்பர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாக 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டரின் நண்பர் மூலம் 5 மருத்துவர்கள் உட்பட 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

