ஹைதராபாத்: கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சைபராபாத் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செவெல்லா என்ற இடத்தில் உள்ள பாலத்துக்குக் கீழே நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் உடலில், முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்துக்கு மிக அருகில் தான் கடந்த நவம்பர் 2019ல் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தங்கேடப்பள்ளி கிராமத்துக்கு வெளியே இருக்கும் அந்த பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் உடல் இருப்பதை, அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பெண்ணின் உடலில் கை மூட்டு மற்றும் தொண்டைப் பகுதியில் கத்தியால் கீறிய காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலைகாரர்கள், நைலான் கயிறைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம். வேறு இடத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, பெண்ணின் உடலை இங்கே வீசியிருப்பதாகவும், அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். முகத்தையும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
உடற்கூறு சோதனைக்குப் பிறகே அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையுண்ட பெண் 25 - 30 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என்றும், சம்பவம் தொடர்பாக எந்த சாட்சியமும் அந்த இடத்தில் கிடைக்கவில்லை. பெண்ணின் உடலிலும் வேறு எந்த அடையாளங்களும் இல்லை. விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்
அருப்புக்கோட்டை புதிய அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை!

சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் நேரடிப் பேச்சு முறிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


