எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கால்நடை பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


ஹைதராபாத்: கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சைபராபாத் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செவெல்லா என்ற இடத்தில் உள்ள பாலத்துக்குக் கீழே நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் உடலில், முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு மிக அருகில் தான் கடந்த நவம்பர் 2019ல் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தங்கேடப்பள்ளி கிராமத்துக்கு வெளியே இருக்கும் அந்த பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் உடல் இருப்பதை, அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பெண்ணின் உடலில் கை மூட்டு மற்றும் தொண்டைப் பகுதியில் கத்தியால் கீறிய காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலைகாரர்கள், நைலான் கயிறைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம். வேறு இடத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, பெண்ணின் உடலை இங்கே வீசியிருப்பதாகவும், அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். முகத்தையும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

உடற்கூறு சோதனைக்குப் பிறகே அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையுண்ட பெண் 25 - 30 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என்றும், சம்பவம் தொடர்பாக எந்த சாட்சியமும் அந்த இடத்தில் கிடைக்கவில்லை. பெண்ணின் உடலிலும் வேறு எந்த அடையாளங்களும் இல்லை. விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.