சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ரூ. 50 ஆக உயர்ந்தது ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட்!

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு  முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.

News image
ரயில்வே பிளாட்பாரம்
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

IANS

புது தில்லி: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு  முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 126  பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு  முழுவதும் 250 ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 50 ஆக உயந்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' ரயில்வே நிலையங்களில் தேவைக்கு அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் 250 முக்கிய ரயில்வே நிலையங்களில், ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயந்துள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதமே இத்தகைய தருணங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை உயர்த்துவதற்கான அதிகாரத்தை மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு வழங்கியுள்ளோம்' என்று தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.