எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்கள்

கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை


ஜெய்ப்பூர்: கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்த நான்கு பேருக்கும், பன்றிக் காய்ச்சல், மலேரியா மற்றும் எச்ஐவி பாதித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை ஒன்றிணைத்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனையாகக் கருதப்படும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த நான்கு பேரில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

துபையில் இருந்து திரும்பிய ஜெய்ப்பூர் நபருக்கு தற்போது கரோனா பாதிப்பு இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லட், கரோனாவைக் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு டிவிட்டர் பக்கம் மூலமாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

நான்கு பேரில் மூன்று பேர் குணமடைந்த நிலையில், ஸ்பெயினில் இருந்து திரும்பிய ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.