எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்: கரோனா பாதித்து உயிரிழந்தவரின் மகன் குற்றச்சாட்டு

எனது தந்தையின் மரணத்துக்கு மருத்துவர்களின் பயமே காரணம் என்று கர்நாடகத்தில் கரோனா பாதித்து உயிரிழந்த 76 வயது முதியவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:11 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

கலபுர்கி: எனது தந்தையின் மரணத்துக்கு மருத்துவர்களின் பயமே காரணம் என்று கர்நாடகத்தில் கரோனா பாதித்து உயிரிழந்த 76 வயது முதியவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கரோனா பாதித்த எனது தந்தைக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதும், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார்கள். பிறகு 8ம் தேதி வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கும் அவர்கள் ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர்.

எங்களுக்கு ஹைதராபாத் செல்ல விருப்பமே இல்லை. ஆனால் எங்களை ஹைதராபாத் கொண்டு செல்ல வலியுறுத்தினர். அங்கு சென்றும், அவர் துபையில் இருந்து வந்தவர் என்று தெரிந்ததால், மருத்துவமனைகளில் அனுமதிக்கவில்லை.

கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து அறிந்ததும், இரண்டு மணி நேரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர்.

பிறகு குல்பர்கா மருத்துவ அறிவியல் மையத்தில் அனுமதித்தோம். அங்கு மருத்துவர்கள் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.

9ம் தேதி மாலை 4 மணி முதல் 10ம் தேதி காலை 2 மணி வரை அவர் ஆம்புலன்ஸிலேயே அலைக்கழிக்கப்பட்டாரே தவிர, அவருக்கு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் மகன் கூறுகிறார்.

இது குறிது கலபுர்கி துணை ஆணையரிடம் கேட்டபோது, முதியவரின் குடும்பத்தினர், மருத்துவ ஆலோசனைக் கேட்காமல், அவரை ஹைதராபாத் கொண்டுவந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் அவரை குல்பர்கா மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.