மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா பாதிப்பு: கேரளத்தில் தீவிர கண்காணிப்பில் 6,000 பேர்

வெள்ளிக்கிழமை மாலை முதல், கேரளத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் சுமார் ஆறு ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :14 மார்ச் 2020, 12:07 pm


திருவனந்தபுரம்: வெள்ளிக்கிழமை மாலை முதல், கேரளத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் சுமார் ஆறு ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருப்பதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சனிக்கிழமை மதியம் நிலவரப்படி, கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் 7 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா மூவருக்கும், திரிச்சூர், கன்னூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட 6,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 300 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பொழுதுபோக்குப் பூங்காக்கள், கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆலப்புழாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், தப்பிச் சென்று கொச்சி விமான நிலையத்துக்கு சென்றனர். மருத்துவக் குழுவினரின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.