திருவனந்தபுரம்: வெள்ளிக்கிழமை மாலை முதல், கேரளத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் சுமார் ஆறு ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருப்பதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சனிக்கிழமை மதியம் நிலவரப்படி, கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் 7 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா மூவருக்கும், திரிச்சூர், கன்னூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட 6,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 300 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பொழுதுபோக்குப் பூங்காக்கள், கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆலப்புழாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், தப்பிச் சென்று கொச்சி விமான நிலையத்துக்கு சென்றனர். மருத்துவக் குழுவினரின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!

மாநிலங்களவை: மூன்றில் இரு பங்கு பலம்பெற தே.ஜ. கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் தேவை?

மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம்!

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


