ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கை இல்லையென்றால் என்ன? தன்னம்பிக்கை இருக்கிறதே: கால்களால் கார் ஓட்டி அசத்தும் பெண்

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஜிலுமோல் மேரியட் தாமஸ் (28). இவர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.

News image
Updated On :9 மார்ச் 2020, 9:46 am


கொச்சி: கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஜிலுமோல் மேரியட் தாமஸ் (28). இவர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.

நாள்தோறும் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதே கடினமான விஷயமாக இருக்கும் ஜிலுமோல் பிறக்கும் போது வேண்டுமானால் பலரது பரிதாபப் பார்வைக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால் இன்று அவர் பலரும் வியந்து பேசும் லட்சியப் பெண்ணாகியுள்ளார்.

ஆம், கைகள் இல்லாத நிலையில், கால்களால் கார் ஓட்டிப் பழகி பலருக்கும் முன்மாதிரியாகியுள்ளார்.

கார் ஓட்டுவது என்பது இவருக்கு வாழ்நாள் கனவாம். தனக்குப் பிடித்த சாலைகளில் எல்லாம் இவர் தனியாக வாகனத்தை இயக்கி மகிழ்ந்து வருகிறார்.

பயத்தை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த தைரியத்தோடுதான் கால்களால் கார் ஓட்டிப் பழகினேன். ஓட்டுநர் உரிமத்துக்காக மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்ற போது, அங்கே ஒரு சவால் காத்திருந்தது.

இந்தியாவில் என்னைப் போன்று கால்களால் கார் ஓட்டி யாரேனும் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், அதன் நகலை இணைக்குமாறு சொன்னார்கள். இந்தியா முழுக்க தேடியதில், விக்ரம் அக்னிஹோத்ரி என்பவர் கால்களால் கார் ஓட்டி உரிமம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

2018ம் ஆண்டு ஜிலுமோல் சொந்தமாகக் கார் வாங்கி, அதனை தனக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டார். எனது குடும்பத்தில் யாருக்குமே கார் ஓட்டத் தெரியாது. நானே எனது சொந்த முயற்சியில் கார் ஓட்டப் பழகினேன். தற்போது ஒரு பிரிட்ண்டிங் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனராகவும் பணியாற்றுகிறார் ஜிலுமோல்.

நான் என் சொந்த சம்பாத்தியத்தில்தான் கார் வாங்கினேன். கார் ஓட்டுவதற்கு முன்பு எனது பெற்றோரை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தேன். தற்போது வரை இவரது வாகனத்துக்கு பதிவு பெறவில்லை. ஓட்டுநர் உரிமமும் கிடைக்கவில்லை. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கிவிட்டது. மாநில அரசும் இது குறித்து பரிசீலித்து வருகிறது. எனது கனவை நனவாக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று அதே தன்னம்பிக்கையோடு பேசுகிறார் ஜிலுமோல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.