இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கரோனா வைரஸ்: ஜம்முவில் அனைத்துத் துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:06 pm

ANI


ஜம்மு: கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் (திட்டம்) ரோஹித் கன்சால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீரில் அனைத்து வகையான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறைகளையும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.