நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எல்லைப் பிரச்சினை: இந்திய சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

News image
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

IANS

புது தில்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று  மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

சீனாவுடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று  மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

முன்னதாக ஜூன் 6 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் கமாண்டர் மட்டத்திலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புகளின் முடிவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

சீனப் பகுதியில் நடந்த இந்த இரண்டு சந்திப்புகளும் சுமுகமாக நடந்தன.  

இந்நிலையில் செவ்வாயன்று மூன்றாவது தடவையாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இப்பேச்சுவார்த்தையானது லடாக்கின் சுஷுல் பகுதியில்,காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

படைகளை  விலக்கி கொள்வது தொடர்பாக கடந்த இரு சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிகளை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.