பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வித்தியாசமான குடும்ப வன்முறை புகார்: கணவனை அடி வெளுத்து வாங்கிய மனைவி !

கொல்கத்தாவில் குடும்ப வன்முறையால் கணவனை மனைவி சரமாரியாகத் தாக்கும்  விடியோ ஒன்று, ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

News image

கொல்கத்தாவில் குடும்ப வன்முறையால் கணவனை மனைவி சரமாரியாகத் தாக்கும்  விடியோ ஒன்று, ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

Updated On :28 ஜூன் 2020, 1:56 pm

கொல்கத்தா: கொல்கத்தாவில் குடும்ப வன்முறையால் கணவனை மனைவி சரமாரியாகத் தாக்கும்  விடியோ ஒன்று, ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதுதொடர்பாக பிதாநகர் (வடக்கு) காவல்நிலைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியில் வசதியானவர்கள் வாழும் சால்ட்  லேக் குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பிதாநகர் (வடக்கு) காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சால்ட்  லேக்  பி.டி ப்ளாக்கில், தீப் மஜும்தார் (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேப்ஜனி சன்யால். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. தம்பதியினரிடையே பெரிய பிரச்னைகள் இல்லை.

ஆனால் கடந்த நான்கு வருடங்களாக தான் குடும்ப வன்முறையினை அனுபவித்து வருவதாக மஜும்தார் தெரிவிக்கிறார். அதற்கு சாட்சியாக மஜூம்தாரை அவரது மனைவி தேப்ஜனி சரமாரியாகத் தாக்கும் விடியோ ஒன்று ஞாயிறன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் மஜூம்தாரை கண்மண் தெரியாமல் தாக்கி, தேப்ஜனி அறைகிறார். அத்துடன் கைகளை முறுக்கி வெறியுடன் தாக்குவதும் நடக்கிறது. இவை எல்லாம் மஜும்தாரின் லேப்டாப் காமெரா வழியாக பதிவாகியுள்ளது. அத்துடன் தனது பெற்றோரையும் தேப்ஜனி மரியாதைக்குறைவாக நடத்துவதாக மஜும்தார் தெரிவிக்கிறார். இதுதொடர்பாக அவர் புகாரும் அளித்துள்ளார். அதனைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.