புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கரோனா பாதித்த எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை 475 ஆக உயர்வு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :4 ஜூன் 2020, 5:43 am

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 479 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், ஆய்வக ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்களும் இதில் அடங்குவர். 

 இவா்களில் 2 மருத்துவப் பேராசிரியா்கள், 17 உறைவிட மருத்துவா்கள், 38 செவிலியா்கள், 14 தொழில்நுட்ப வல்லுநா்கள், ஐந்து உணவக பணியாளா்கள், 74 மருத்துவ உதவியாளா்கள், 54 தூய்மைப் பணியாளா்கள், 74 பாதுகாவலா்கள் அடங்குவா். 

இவர்களில் 329 மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் நோயில் இருந்து மீண்டு பணியில் சோ்ந்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.