மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனாவில் இருந்து பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி இரண்டுக்கும் முக்கியத்துவம்: பிரதமர் மோடி உரை

ஒரு பக்கம் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தினாலும், அதே சமயம், மற்றொரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள

News image
Updated On :2 ஜூன் 2020, 6:18 am


புது தில்லி: ஒரு பக்கம் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தினாலும், அதே சமயம், மற்றொரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியை மீட்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். 

கரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

ஏழை, எளிய மக்களின் நலன் காக்க இதுவரை ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரீப் கல்யாண் திட்டத்தில் 74 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று மோடி கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், நிச்சயமாக நாம் மீண்டும் நமது பொருளாதார வளர்ச்சியை அடைவோம். கரோனா நமது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை வேண்டுமானால் குறைத்திருக்கலாம், ஆனால், இந்தியா மீண்டும் அதே வேகத்தோடு பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.