மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 ஜூன் 2020, 6:19 am

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

புது தில்லியின் சிவில் லைன்ஸ், ராஜ் நிவாஸ் மார்க்கில் அமைந்துள்ள தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பதையடுத்து, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முடிவுகள் வரும் வரை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தின் கிளையில் முதலில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று சாதகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மேலும் 210 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,171 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,98,706-ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.