மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பெங்களூருக்கு அருகில் 120 அடி உயர விவேகானந்தர் சிலை அமைக்க உள்ள பாஜக அரசு!

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில  அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா தெரவித்துள்ளார்.

News image

அமைச்சர் சோமண்ணா

Updated On :1 ஜூன் 2020, 12:13 pm

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில  அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா தெரவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகேயுள்ள முத்யாலயா மடுவி நீர்வீழ்ச்சிக்கு அருகே சுவாமி விவேகானந்தருக்கு 120 அடி உயர சிலையொன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலம் கேவடியாவில் சர்தார் சரோவர் அணைக்கட்டிற்கு அருகே நிறுவப்பட்டுள்ள வல்லபாய் படேலின் சிலையைப் போன்று, நீர்நிலைக்கு அருகே ஒரு சிலை என்ற அடிப்படையில் இதனை உருவாகத் திட்டமிட்டுள்ளோம்.  

மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள இந்த சிலை அமையவுள்ள இடமானது, பன்னர் கட்டா தேசியப் பூங்காவில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்.

இதுதொடர்பான முறையான தகவல்களுடன் கூடிய திட்ட அறிக்கையானது 15 நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.