கோண்டா: சகோதரத்துவத்தின் சிறப்பை விளக்கும் ‘ரக்ஷா பந்தன்’ விழாவினை இந்தியா முழுமையும் கொண்டாடினாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறது.
தங்களை தீமைகளில் இருந்து காக்கும் சகோதரர்களுக்காக சகோதரிகள் கையில் ‘ராக்கி’ என்னும் கயிறு கட்டிக் கொண்டாடும் பண்டிகையான ‘ரக்ஷா பந்தன்’ இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் மட்டும் இதிலிருந்து தள்ளி நிற்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதில்லை. அதுமட்டும் அல்ல அந்த பெயரை உச்சரிக்கவும் கூட சிலர் தயங்குகின்றனர். அதைக் கொண்டாடினால் தங்களுக்கு கெட்டது நடக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அக்கம் பக்கத்திலுள்ள சிறிய கிராமங்களில் கூட இதே நிலைதான் நீடிக்கிறது. இப்படியான ஒரு நம்பிக்கை அந்த ஊரில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் ஊறிக் கிடக்கின்றது.
அந்தக் கிராமத்தின் வயதான பெரியவர்களில் ஒருவரான சுர்யநாராயண் மிஸ்ரா இந்த நம்பிக்கை குறித்துக் கூறியதாவது:
கடந்த 1955-ஆம் வருடம், ரக்ஷா பந்தன் தினத்தன்று எங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். அதிலிருந்து அன்றைய தினத்தில் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்ட இங்குள்ள இளம்பெண்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சில பெண்களின் வற்புறுத்தலான வேண்டுகோளுக்கு இணங்க, சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்ட முயன்ற போது, மீண்டும் ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதிலிருந்து இங்கு யாரும் ராக்கி கட்டவோ அல்லது அந்த பண்டிகையின் பெயரை உச்சரிப்பதற்கோ துணிவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


