திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மும்பையில் கட்டடம் சரிந்த விபத்தில் பலி 9 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை கனமழை பெய்ததை  அடுத்து, குடியிருப்புக் கட்டடம் சரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

News image

தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியில் கட்டடம் சரிந்த பகுதியில் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினா்.

Updated On :17 ஜூலை 2020, 9:38 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை கனமழை பெய்ததை  அடுத்து, குடியிருப்புக் கட்டடம் சரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு மும்பையின் ஃபோா்ட் பகுதியில் உள்ள 6 அடுக்கு பழைய கட்டடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை படை தெரிவித்துள்ளது. 

நேற்று மற்றொரு பகுதியிலும் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையின் புகா்ப் பகுதியான மால்வானியில் மூன்றடுக்கு கட்டடம் கன மழை காரணமாக சரிந்தது. தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் இருந்து 15 பேரை காயங்களுடன் மீட்டனா். அதில் இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 13 போ் சிகிச்சையில் உள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.