சண்டிகர்: இதர மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து வெறும் 72 மணி நேரத்தில் சென்றுவிட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது, மாநிலத்துக்கு வந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கும், தொழில் ரீதியாக மற்றும் இதர காரணங்களுக்காக பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து ஓரிரு நாள்களில் வெளியேறிவிடும் பயணிகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் அவர்கள் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசின் COVA செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தங்களது பயணம் முழுக்க அந்த செயலி பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


