கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

IANS


புது தில்லி: கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யுமாறு உத்தரவிடவும், அமர்நாத் பனிலிங்கத்தை இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், அமர்நாத் பனி லிங்க தரிசனத்தை செயல்படுத்துவது அப்பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. அமர்நாத் பனிலிங்க தரிசனம் தொடர்பாக, உள்ளாட்சி அமைப்பே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.