மும்பை: இந்தியாவை விட, பிரிஹன்மும்பை மாநகராட்சியில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 50 நாள்களாக உள்ளதாக மும்பையின் மூத்த அரசு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் பரிந்துரையின்றி அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் வகையில் கரோனா பரிசோதனை முறையை நாட்டில் முதல் முறையாக மாற்றியமைத்ததன் காரணமாக, மும்பையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பரிசோதனை முறையை மாற்றியத்தது முதல் நாள்தோறும் மும்பையில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை 4 ஆயிரம் முதல் 6,800 ஆக உயர்ந்தது. அதே சமயம், ஒரு நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை 1400ல் இருந்து 1200 ஆகவும் குறைந்தது என்று பிரிஹன்மும்பை மாநகராடசி ஆணையர் ஐ.எஸ். சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்த 1200லும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வெறும் 200 பேராக மட்டுமே இருந்தது. இதனால் 1200 பேரில் 200 பேருக்கு மட்டுமே படுக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவானது. மேலும், மும்பையில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கைகள் ஒதுக்கிய பிறகும் தற்போது 7000 படுக்கை வசதியும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 250 படுக்கை வசதியும் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மார்ச் 11 ம் தேதி முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது 2,54,427 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்னர். 10,289 பேர் மரணம் அடைந்துளள்னர். இதில் மும்பையில் மட்டும் 92,988 பேருக்கு கரோனா பாதித்து, 5,288 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


