திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

சட்ட மேலவை கலைப்புக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் மேலவை கலைக்கப்படுவதற்கான முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2020, 7:55 am

ஆந்திர மாநில சட்டப்பேரவையின் மேலவை கலைக்கப்படுவதற்கான முடிவுக்கு ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர சட்டமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்னதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை மேலவையை கலைப்பதற்கான முடிவுக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டது. 

ஆந்திர சட்டப்பேரவையின் மேலவையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய சில முக்கிய மசோதாக்களை மேலவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதையடுத்து, மேலவையை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட ஜெகன்மோகன் முடிவு செய்து, அதற்கான மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதற்கு வசதியாக, ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டு, மேலவை கலைப்பு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதும், அது மத்திய அரசுக்கு அனுப்பி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.