கொல்கத்தா: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசைக் கடுமையாக விமரிசித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி பங்கேற்கும் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள துறைமுக அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகப் பங்கேற்கவில்லை. கடைசியாக இருவரும் 2018ம் ஆண்டு விஸ்வபாரதியில் அமைக்கப்பட்ட பங்களாதேஷ் பவன் துவக்க விழாவில்தான் ஒன்றாகப் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், ராஜ் பவனில், பிரதமர் மோடிக்கு ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சனி, ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள துறைமுக அறக்கட்டளையின் நிகழ்ச்சியிலும், பாரம்பரிய கட்டடங்களை தேசத்திற்கு அா்ப்பணிக்கும் விழாவிலும் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்கிறாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொல்கத்தாவில் பழைமையின் சின்னமாக உள்ள பழைய நாணய கட்டடம், பெல்வெடாா் இல்லம், மெட்காஃப் இல்லம், விக்டோரியா நினைவு மண்டபம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்கள் கலாசார அமைச்சகம் சாா்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற உள்ள விழாவில் இந்த 4 கட்டடங்களையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் கொண்டாட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.
கொல்கத்தா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தற்போதைய ஊழியா்களின் ஓய்வூதிய நிதியின் பற்றாக்குறையை பூா்த்தி செய்வதற்காக மத்திய அரசு சாா்பில் இறுதி தவணையாக அளிக்கப்பட உள்ள ரூ. 501 கோடிக்கான காசோலையையும் அவா் ஒப்படைப்பாா்.
இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களான நாகினா பகத் (105), நரேஷ் சந்திர சக்ரவா்த்தி (100) ஆகியோரை பிரதமா் பாராட்டுவாா்.
தவிர, துறைமுகத்தையொட்டியுள்ள படகு இறங்குத்துறையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 150 ஆண்டு நினைவு கல்வெட்டையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.
மற்றொரு நிகழ்வில், சுந்தரவனத்தைச் சோ்ந்த 200 பழங்குடி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி மையத்தையும் பிரதமா் திறந்து வைக்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


