குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முதியோர் இல்லத்தில் கைகோர்த்த தம்பதி: வரலாற்றில் இது புதிது

திரிசூரில் உள்ள ராமவர்மாபுரம் அரசு முதியோர் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், அங்கு தங்கியிருந்த இரண்டு முதியவர்கள் தங்களது வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதுதான்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:18 pm

ENS

திரிசூர்: திரிசூரில் உள்ள ராமவர்மாபுரம் அரசு முதியோர் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், அங்கு தங்கியிருந்த இரண்டு முதியவர்கள் தங்களது வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதுதான்.

67 வயதான கோச்சானியன் - 65 வயது லஷ்மி அம்மாள் இருவரது திருமணம் கடந்த வாரம் வெகுக் கோலாகலமாக நடைபெற்றது. இது வரலாற்றில் புதிய விஷயமாகப் பதிவாகியுள்ளது. முதியோர் இல்லங்களில் இதுபோன்ற திருமணம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

இவர்களது திருமணத்தில் கேரள அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

திரிசூர், இறிஞ்சலக்குடி அருகே லஷ்மி அம்மாளின் கணவரிடம் உதவியாளராக இருந்தவர் கோச்சானியன். 21 ஆண்டுகளுக்கு முன்பு, லஷ்மி அம்மாளின் கணவர் இறந்த பிறகும், லஷ்மி அம்மாளுக்குத் தேவையான உதவிகளை கோச்சானியன் செய்து வந்தார். இந்த நிலையில், கோச்சானியன் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வேறு இடம் சென்றுவிட்டார்.

பல ஆண்டுகள் கழிந்த நிலையில், கோச்சானியனின் மனைவி உயிரிழந்துவிட, அவரது குடும்பத்தினர் கோச்சானியனை கைவிட்டுவிட்டனர். அப்போதுதான் அவர் திரிசூரில் உள்ள முதியோர் இல்லத்துக்கு வருகிறார். அங்கு தங்கியிருந்த லஷ்மி அம்மாளை மீண்டும் சந்திக்கிறார்.

இவர்களுக்கு இடையே தோழமை இருப்பதைக் கண்ட முதியோர் இல்ல கண்காணிப்பாளர், அவர்களை திருமணம் செய்து கொள்ள ஊக்கப்படுத்தினார்.  இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியவர்கள் தங்களது தனிமையை ஒழிக்க, இதுபோன்று திருமணங்களை நடத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேரள மாநில சமூக நீதித் துறை வலியுறுத்தி வரும் நிலையில், முதல் முறையாக இதுபோன்ற திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.