எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தில்லி வன்முறை: செல்போன் செயலி மூலம் வாகனங்களைக் குறிவைத்துத் தாக்கிய சமூக விரோதிகள்

தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:00 pm

எக்ஸ்பிரஸ் செய்தி சேவை

தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

பொதுத் தகவல்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கினால் என்னவாகும் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது.

அதாவது, தில்லியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்கள் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கு, செல்போன் செயலி மூலம், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொடுத்தால், அதில் வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் செல்போன் செயலி மூலம் சமூக விரோதிகள், ஒரு வாகனம் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது என்பதை கண்டறிந்து, அதனை தீக்கிரையாக்கியும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுபோன்ற ஒரு சில செல்போன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அந்த செயலிகளில், ஒருவர், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை போட்டால் போதும், அந்த வாகன உரிமையாளரின் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் தெரிய வரும்.

இன்னும் சில செல்போன் செயலிகளில், வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்தால் கூட போதும், அதன் முழு விவரங்களையும் அள்ளிக் கொடுத்துவிடும்.

ஒரு பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர்தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்து, அங்கு வந்த சமூக விரோதிகள் சாலைகளில் நின்றிருந்த வாகனங்களின் பதிவு எண்களை செல்போன் செயலியில் பதிவிட்டு, அதன் உரிமையாளர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்து கொண்ட பிறகே வாகனங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இங்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.

அதே சமயம், வாஹன் டேட்டா (வாகனங்களின் தகவல்) என்ற பெயரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் தகவல்கள், தனியாருக்கும் பரிமாறப்படுகிறது. லாப நோக்கத்துடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தனியாருடன் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற தகவல்கள், தவறான முறையில் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.