மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது: சிதம்பரம் வேதனை

சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

News image

ப.சிதம்பரம்

Updated On :25 பிப்ரவரி 2020, 12:02 pm

புது தில்லி: சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறையாகியதில், போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 9 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர தில்லி காவல்துறை போராடி வருகிறது.

இந்நிலையில் சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை வெகுவாக பிளவுபடுத்தக் கூடியது என்றும், அதனை உடனே நீக்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ்)  எச்சரித்திருந்தோம். ஆனால்  அது செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது. உணர்ச்சியற்ற, தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.

இப்போதும் காலம் ஒன்றும் கடந்து விடவில்லை. அரசு சிஏஏ எதிர்ப்பாளர்களின் குரலை செவிமெடுக்க வேண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு வழங்கும் வரை சட்டத்தை செயல்படாமல் வைக்க வேண்டும்.

இந்தியாவில் குடியுரிமைச் சட்டமானது 1965-ஆம் ஆண்டு முதல் எந்த விதமான திருத்தமும் இன்றி நடைமுறையில் இருந்து வருகிறது. இப்போது மட்டும் ஏன் திருத்தம் தேவைப்படுகிறது? இந்த திருத்தச் சட்டமானது உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.