திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மிக லாவகமாக படியேறும் யானை: விடியோவைப் பாருங்கள் அசந்து போவீர்கள்

சாலையோரம் இருக்கும் நேரான படிகட்டுகளை மிக அழகாக ஏறிச் செல்லும் யானையின் விடியோ இன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 11:18 am


புது தில்லி: சாலையோரம் இருக்கும் நேரான படிகட்டுகளை மிக அழகாக ஏறிச் செல்லும் யானையின் விடியோ இன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி (ஐஎஃப்எஸ்) பிரவீன் கஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த யானை மிக அழகாக படிகட்டுகளைப் பயன்படுத்துகிறது. மேலேச் செல்ல வேறு வழிகள் இருந்தாலும், படிகட்டு வழியாகச் செல்கிறது. கடைசியாக இந்த பார்வை நமக்கு பல விஷயங்களைச் சொல்கிறது என்று பதிவிட்டு ஒரு விடியோவை இணைத்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, பாருங்களேன், படிகட்டுகளை இந்த யானை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்துகிறது. யானைகள் மிக திறமைமிக்க விலங்கு. இவைகள் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளும். இதுபோன்று பல்வேறு தடுப்புகளையும் எவ்வாறு கடப்பது என்பதையும் எளிதாகவே தெரிந்து கொள்கின்றன, தங்களது வாழ்க்கைக்காக என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடியோவில், ஒரு யானை படிகட்டுகளை மிக லாவகமாக ஏறிச் சென்று, திரும்பி ஒரு பார்வை பார்க்கிறது.

இந்த விடியோவுக்கு 2.4K விருப்பங்கள் (லைக்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 33.2K முறை பார்க்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.