மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சட்டவிரோத பொருட்களை ஏற்றிச் சென்ற 12 லாரிகள் பறிமுதல்

இந்த வெற்றிலைகளின் சந்தை மதிப்பு ரூ .3.60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 12:33 pm

அஸாம் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள டிமா ஹசாவோ மாவட்டத்தில் இருந்து 120 டன் சட்டவிரோதமாக 'பர்மிய சுபாரி (பாக்கு)' (மியான்மர் வெற்றிலைக் பாக்குக் கொட்டைகள்) ஏற்றிச் சென்ற 12 லாரிகளை அஸாம் வன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இந்த வெற்றிலைகளின் சந்தை மதிப்பு ரூ .3.60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில், வனத்துறை ஊழியர்கள் புதன்கிழமை உள்ளூர் மக்களின் உதவியுடன் ஹஃப்லாங்கிற்கு அருகிலுள்ள ஹரங்கஜாவோ மற்றும் ஜாடிங்கா பகுதியில் உள்ள லாரிகளை பறிமுதல் செய்தனர்.

வன அதிகாரிகளின் கூற்றுப்படி, 'பர்மிய சுபாரி' மியான்மரிலிருந்து கடத்தப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய ஒரு குழு 'பர்மிய சுபாரி' சட்டவிரோத வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

"இந்த 'பர்மிய சுபாரி', மியான்மரிலிருந்து மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு கடத்தப்படுகின்றன, பின்னர் அஸாம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன,"  என்ற வன அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளியிட மறுத்துவிட்டனர்.

வன உற்பத்தியில் சட்டவிரோத வியாபாரம் செய்வதற்கும், 'பர்மிய சுபாரி' போன்ற பல்வேறு பொருட்களில் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதற்கும் காவல்துறை தங்களுக்கு உதவவில்லை என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

கடந்த மாதம் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பணியாளர்கள் சுமார் 82 டன் எடையுள்ள 1,353 பைகள் மற்றும் சுமார் 2.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 491 யூனிட்டுகள் மற்றும் மியான்மரின் எல்லையில் உள்ள கம்ஜோங் மாவட்டத்தில் (வடகிழக்கு மணிப்பூர்) மணிப்பூரின் எல்லை கிராமங்களில் இருந்து சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள பல்வேறு வகை மரங்களின் 491 யூனிட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்திய வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு பிரதேசங்களும் மியான்மருடன் 1,640 கி.மீ. இடைவெளியில் எல்லைப் பாதுகாப்புக்கள் இன்றி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.