அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

உ.பி.யில் 2 வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா பாதிப்பு

சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து தனது பெற்றோருடன் மீரட்டுக்கு திரும்பிய இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

News image
உ.பி.யில் 2 வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 6:15 pm

IANS

சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து தனது பெற்றோருடன் மீரட்டுக்கு திரும்பிய இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவராவார். இது முந்தைய கரோனாவை விட 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியதாகக் கூறப்படுகிறது. 

குழந்தையின் பெற்றோர், ஏற்கெனவே உள்ள பழைய கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீரட் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்கவைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து திரும்பிய ஒரு பெண் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருடைய பெற்றோர்களுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. ஆனால் இது உருமாறிய கரோனா இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறினார்.

குழந்தையின் குடும்பத்தினர் நால்வருக்கு கரோனா இருக்கும் நிலையில், உருமாறிய கரோனா உள்ளதா என கண்டறிய அவர்களுடைய மாதிரிகள் பரிசோதனைக்கு தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் இரண்டு வயதுக் குழந்தைக்கு உருமாறிய கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. 

சோதனை முறைகளை மேம்படுத்தவும், புதிய வைரஸ் மாறுபாட்டின் பரவலைக் கண்டறியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி அந்நாட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.