தெலங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் பி.அஜய் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் குமார் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தெலங்கானாவில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 491 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு 2.78 லட்சமாக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றுக்குப் புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,499 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 7,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கள்கிழமை மட்டும் 48,005 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 62,05 லட்சம் பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 96.85 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 0.53 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


