மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டோர் விகிதம் 94.88% ஆக உயர்வு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 30,006 ஆக உள்ளது. கரோனா பாதித்தவர்களில் 442 பேர் உயிரிழந்தனர்.

News image

நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டோர் விகிதம் 94.88% ஆக உயர்வு

Updated On :12 டிசம்பர் 2020, 5:46 am

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 30,006 ஆக உள்ளது. கரோனா பாதித்தவர்களில் 442 பேர் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,006 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,26,775 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், கரோனா தொற்றுக்கு மேலும் 442 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,42,628-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 93,24,328 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். இது, மொத்த பாதிப்பில் 94.88 சதவீதமாகும்.

நாட்டில் இப்போது 3,59,819 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.66 சதவீதமாகும். புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 9-ஆம் தேதி வரை 15,26,97,399 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், டிசம்பர் 11ம் தேதி மட்டும் 10,65,176 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.