மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஒரே பெயரில் 2 கரோனா நோயாளிகள்: உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில், ஊழியர்கள் செய்த குளறுபடியால், உயிரோடு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் க

News image

ஒரே பெயரில் 2 கரோனா நோயாளிகள்: உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ்

Updated On :9 டிசம்பர் 2020, 12:30 pm

 
புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில், ஊழியர்கள் செய்த குளறுபடியால், உயிரோடு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறுகையில், ஒரே மருத்துவமனையில் கரோனா பாதித்து  ஸ்ரீனிவாஸ்குமார் என்ற பெயரில் இரண்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால்தான் இந்த குழப்பம் நேரிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

33 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஸ்ரீனிவாஸ்குமார்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 44 வயது ஸ்ரீனிவாஸ்குமார் பலியாகிவிட்டார். அப்போது பணியிலிருந்த செவிலியர்கள் தங்களது பணிநேரம் முடிந்து, புதிய செவிலியர் பணிக்கு வந்ததால், பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

இது குறித்து 33 வயது ஸ்ரீனிவாஸ்குமாரின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் டிசம்பர் 1ம் தேதி இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.

உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு, இந்த விவகாரத்தை முடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.