அகமதாபாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ரிக்டர் அளவில் 1.7 முதல் 3.3 வரையிலான தொடர்ந்து 19 பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் எந்தவொரு விபத்தும், இழப்பும் ஏற்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவித்தனர்.
காந்தி நகரத்தைத் தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) மூத்த அதிகாரி ஒருவர் இந்த நில அதிர்வுகள் பருவமழையால் ஏற்பட்டதாகும் என்றார்.
மேலும், அவர் கூறியதாவது,
குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமே தவிர, வேறு எதுவும் இல்லை என்று கூறினார். இதுகுறித்து கவலைப்பட அவசியமில்லை.
இன்று அதிகாலை 1.42 மணி முதல், 19 நிலநடுக்கங்கள், அதாவது 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சௌராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு மையப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலும் ரிக்டர் அளவில் 3 ஆகவே பதிவாகியது. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 12 கி.மீ. இல் இருந்தது.
3.2 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் காலை 9.26 மணியளவில் தலாலாவின் 11 கி.மீ மையப்பகுதியில் உணரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
19 நிலநடுக்கங்களில் மூன்று உள்பட 3.1 ரிக்டர் அளவிலானவை என்று அவர் கூறினார். இது பருவமழையால் ஏற்பட்ட நில அதிர்வே ஆகும்.
மேலும், பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, இரண்டு மூன்று மாத மழைக்குப் பிறகு இதுபோன்ற நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன என்று ஐ.எஸ்.ஆர் இயக்குனர் சுமர் சோப்ரா கூறினார்.
இவை சிறிய அளவிலான நில அதிர்வுகளே தவிர வேறெந்த பாதிப்பும் இல்லை மக்கள் கவலைப்படத் தேவையில்லை, என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


