சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு அல்லது பதவி விலகு: மம்தா

மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்

News image

பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்: மம்தா

Updated On :7 டிசம்பர் 2020, 9:38 am


மிட்னாப்பூர்: மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு மிட்னாபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, பாஜக அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மௌனமாக இருப்பதை விட, கைது செய்யப்பட்டு சிறை செல்வதே மேல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, உடனடியாக புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பாஜக பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவைக்கு ஏப்ரல் - மேவில் தேர்தல் நடத்தப்பட  உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.