மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பாஜகவுக்கு வாக்களிக்காததால் துன்புறுத்தப்பட்டதாக தலித் குடும்பம் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒரு தலித் குடும்பத்தை அந்த மாநில அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த

News image
பாஜகவுக்கு வாக்களிக்காததால்.. துன்புறுத்தப்பட்ட தலித் குடும்பம்
Updated On :27 ஜனவரி 2024, 6:00 pm

ENS


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒரு தலித் குடும்பத்தை அந்த மாநில அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்தலுக்கு பயந்து, குழந்தைகள், பெண்கள் பல ஒரு குடும்பமே கடந்த சில நாள்களாக ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்பு வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

தங்களது துன்புறுத்திய சுரேஷ் தாக்கத் ரத்கேடாவின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், போஹ்ரி பேரவைத் தொகுதியில் எங்களுக்கு வாக்குரிமை உள்ளது. எங்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் யானைச் சின்னத்தில்தான் வாக்களித்தோம். அப்போதிலிருந்து எங்களை பாஜக அமைச்சர் சுரேஷ் தாகத் ரத்கேடாவின் உறவினர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். எங்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டும், வீடு புகுந்து அடித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். எல்லாமே பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால்தான் என்கிறார்கள்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் ஊருக்குச் செல்ல மாட்டோம் என்று கூறுகிறார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த தலைவி, வெட்டவெளியில் தனது இடுப்பில் இரண்டு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு சமைத்தபடி. உள்ளூர் காவல்நிலையத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்காததால்தான நாங்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளோம் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.